Saturday 29 October 2011

2 மாயை, மாயை எல்லாம் மாயை........... பகுதி - 1

1.தாவீதின் குமாரனும் எருசலேமின் ராஜாவாகிய பிரசங்கியின் வாக்கியங்கள்.

2.மாயை, மாயை எல்லாம் மாயை என்று பிரசங்கி சொல்லுகிறான்.
3.சூரியனுக்குக் கீழே மனுஷன் படுகிற எல்லாப் பிரயாசத்தினாலும் அவனுக்குப் பலன் என்ன?




4.ஒரு சந்ததி போகிறது மறு சந்ததி வருகிறது ; பூமியோ என்றைக்கும் நிலைத்திருக்கிறது .
5.சூரியன் உதிக்கிறது சூரியன் அஸ்தமிக்கிறது; தான் உதித்த இடத்திற்கே அது திரும்பவும் தீவிரிக்கிறது.

6.காற்று தெற்கே போய், வடக்கேயுஞ்சுற்றி, சுழன்று சுழன்று அடித்து தான்  சுற்றின இடத்துக்கே திரும்பவும் வரும்.
7.எல்லா நதிகளும் சமுத்திரத்திலே ஓடி விழுந்தும் சமுத்திரம்  நிரம்பாது ; தாங்கள் உற்பத்தியான இடத்திற்கே நதிகள் மறுபடியும் திரும்பும்.

8.எல்லாம் வருத்தத்தினால் நிறைந்திருக்கிறது; அது மனுஷரால் சொல்லி முடியாது; காண்கிறதினால் கண் திருப்தியாகிறதில்லை, கேட்கிறதினால் செவி நிரப்பப்டுகிறதில்லை.

9.முன் இருந்ததே இனிமேலும் இருக்கும்; முன் செய்யப்பட்டதே பின்னும் செய்யப்படும்; சூரியனுக்குக் கீழே நூதனமானது ஒன்றுமில்லை.

10.இதைப்பார் , இது நூதனம் என்று சொல்லப்படத்தக்க காரியம் ஒன்றுண்டோ ? அது நமக்கு முன்னுமுள்ள பூர்வகாலங்களிலும் இருந்ததே.
                                                                                                                              தொடரும்.........

மேற்கண்ட இந்த திருவசனங்கள் பரிசுத்த வேதாகமத்திலிருந்து எடுக்கப்பட்டது. தவறாக ஒருவரும் பயன்படுத்தகூடாது.

2 comments:

  1. த‌ங்க‌ள் ப‌திவிற்கு ந‌ன்றி. க‌ர்த்த‌ரின் வார்த்தையை எடுத்துச்சொல்வ‌த‌ற்கு உங்க‌ளுக்கு அவ‌ரின் நிறைவான‌ ஆசீர் வாத‌ங்க‌ள் உண்டு. மேன்மேலும் தொட‌ர‌ வாழ்த்துக்க‌ள். என்றும் அன்புட‌ன், அருள்.

    ReplyDelete
  2. நன்றி. திரு.அருள் அவர்களே

    ReplyDelete

இந்த தளத்தில் வெளியாக்கப்படும் கட்டுரைகளின் ஏதேனும் ஒரு பகுதி தேவைப்பட்டால் தயவு செய்து http://waytoheaven2011.blogspot.com/ -லிருந்து எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவும்.