Friday 28 September 2012

1 செய்வதெல்லாம் வாய்க்கவேண்டுமா? மகிழ்ச்சியாய் இருக்கவேண்டுமா? பெரியகாரியங்கள் நடக்கவேண்டுமா?

   அன்பான சகோதர சகோதரிகளே, கர்த்தருடைய பரிசுத்த வேதாகமத்தை நாம் தினமும் தவறாமல் படிக்கவேண்டும்.
அதன்படி நடக்கவேண்டும். ஏனெனில் ஏசாயா 42:4 ல் (அவர் நியாயத்தைப் பூமியிலே நிலைப்படுத்துமட்டும் இளக்கரிப்பதுமில்லை, பதறுவதுமில்லை; அவருடைய வேதத்துக்குத் தீவுகள் காத்திருக்கும்.) உள்ளதுபோல்  வசனங்களின்படி வேதத்துக்குத் தீவுகள் காத்திருக்கின்றது. ஏசாயா 42:21 ல் (கர்த்தர் தமது நீதியினிமித்தம் அவன்மேல் பிரியம் வைத்திருந்தார்   அவர் வேதத்தை முக்கியப்படுத்தி அதை மகிமையுள்ளதாக்குவார்.) கர்த்தர் வேதத்தை முக்கியப்படுத்தி அதை மகிமையுள்ளதாக்குவார் என்று வேதம் கூறுகிறது. நாமும் கர்த்தருடய வேதத்திற்கு முகியத்துவம் கொடுத்து காத்திருந்து தியானித்து அதன்படி நடப்போமானால் நம்முடைய வாழ்வு ஆசீர்வதிக்கப்படும். ஆமென். 

 
2நாளா 17:9ன் படி வேதம் நம் கையிலிருக்கவேண்டும்
2நாளா 17:9 இவர்கள் யூதாவிலே உபதேசித்து, கர்த்தருடைய வேத புஸ்தகத்தை வைத்துக்கொண்டு, யூதாவின் பட்டணங்களிலெல்லாம் திரிந்து ஜனங்களுக்குப் போதித்தார்கள்



 சங் 1:2 9 ன் படி  பிரியமாயிருக்கவேண்டும்
சங் 1:2 கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.


எஸ்றா 7:10  ன் படி  ஆராயவேண்டும்
எஸ்றா 7:10 கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும், இஸ்ரவேலிலே கட்டளைகளையும் நீதிநியாயங்களையும் உபதேசிக்கவும், எஸ்றா தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான்.



சங் 78:5 ன் படி ஸ்தாபிக்க வேண்டும்
சங் 78:5 அவர் யாக்கோபிலே சாட்சியை ஏற்படுத்தி, இஸ்ரவேலிலே வேதத்தை ஸ்தாபித்து, அவைகளைத் தங்கள் பிள்ளைகளுக்கு அறிவிக்கும்படி நம்முடைய பிதாக்களுக்குக் கட்டளையிட்டார்.



சங் 94:13 ன் படி போதிக்கவேண்டும்
சங் 94:13 சிட்சித்து, உம்முடைய வேதத்தைக்கொண்டு போதிக்கிற மனுஷன் பாக்கியவான்.



சங் 119:1 ன் படி வேதத்தின்படி நடக்கவேண்டும்
சங் 119:1 கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார்; பாக்கியவான்கள்.



சங் 119:34 ன் படி பற்றிக்கொள்ளவேண்டும்
சங் 119:34 எனக்கு உணர்வைத் தாரும்; அப்பொழுது நான் உமது வேதத்தைப் பற்றிக்கொண்டு, என் முழு இருதயத்தோடும், அதைக் கைக்கொள்ளுவேன்.



சங் 119:92 ன் படி மனமகிழ்ச்சியாயிக்கவேண்டும்
சங் 119:92 உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன்.



சங் 119:163,165  ன் படி நேசிக்கவேண்டும்
சங் 119:163 பொய்யைப் பகைத்து அருவருக்கிறேன்; உம்முடைய வேதத்தையோ நேசிக்கிறேன்.
சங் 119:165 உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை.



வெளி 1:3  ன் படி கைக்கொள்ளவேண்டும்
வெளி 1:3 இந்தத் தீர்க்கதாரிசன வசனங்களைவாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில்எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம்சமீபமாயிருக்கிறது



ஏசா 2:3, மீகா 4:2   ன் படி நம்மிலிருந்து வெளிப்படவேண்டும்
ஏசா 2:3 திரளான ஜனங்கள் புறப்பட்டு வந்து: நாம் கர்த்தாரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தாரின் வசனமும் வெளிப்படும்.



மீகா 4:2 திரளான ஜாதிகள் புறப்பட்டு வந்து: நாம் கர்த்தாரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தாரின் வசனமும் வெளிப்படும்.




ஏசா 51:7  ன் படி பதித்திருக்கவேண்டும்
ஏசா 51:7 நீதியை அறிந்தவர்களே, என் வேதத்தை இருதயத்தில் பதித்திருக்கிற ஜனங்களே, எனக்குச் செவி கொடுங்கள்; மனுஷாரின் நிந்தனைக்குப் பயப்படாமலும், அவர்கள் தூஷணங்களால் கலங்காமலும் இருங்கள்.




எரே 2:8  ன் படி வேதத்தின்படி போதிக்கவேண்டும்
எரே 2:8 கர்த்தர் எங்கேயென்று ஆசாரியர்கள் சொல்லாமலும், வேதத்தைப் போதிக்கிறவர்கள் என்னை அறியாமலுமிருந்து, மேய்ப்பர்கள் எனக்குத் துரோகம் பண்ணினார்கள்; தீர்க்கதாரிசிகள் பாகாலைக்கொண்டு தீர்க்கதாரிசனஞ்சொல்லி, வீணானவைகளைப் பின்பற்றினார்கள்.




மல் 2:6,7  ன் படி வாயில் இருக்கவேண்டும்
மல் 2:6 சத்தியவேதம் அவன் வாயில் இருந்தது; அவனுடைய உதடுகளில் அநியாயம் காணப்படவில்லை; அவன் என்னோடே சமாதானமும் யதார்த்தமுமாய்ச் சஞ்சாரித்து, அநேகரை அக்கிரமத்தினின்று திருப்பினான்.
மல் 2:7 ஆசாரியனுடைய உதடுகள் அறிவைக் காக்கவேண்டும்; வேதத்தை அவன் வாயிலே தேடுவார்களே; அவன் சேனைகளுடைய கர்த்தரின் தூதன்.




மத் 21:42  ன் படி வாசிக்கவேண்டும்
மத் 21:42 இயேசு அவர்களை நோக்கி: வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளினகல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று, அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சாரியமாயிருக்கிறது என்று நீங்கள் வேதத்தில் ஒருக்காலும் வாசிக்கவில்லையா
****************************************************************************

1 comments:

இந்த தளத்தில் வெளியாக்கப்படும் கட்டுரைகளின் ஏதேனும் ஒரு பகுதி தேவைப்பட்டால் தயவு செய்து http://waytoheaven2011.blogspot.com/ -லிருந்து எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவும்.